Friday, November 12, 2010

அடுத்தது என்ன ? What Next ? Part 2


 
எல்லாருக்கும் இப்ப புரிஞ்சிருக்கும்  ....  மனுசன்னா இயங்கிகிட்டே தேடிகிட்டே இருக்கணும்.... கண்ணுல படறதை எல்லாம் தன் தேவைக்கு உபயோகப் படர மாதிரி மாத்திக் கிட்டே இருக்கணும்.
 
ஜடப் பொருள அவன் எந்திரமா மாத்தி  இயங்க வைக்கிறான்.... அவன் கண்டுபிடிச்ச கம்ப்யுடர் மனுஷ மூளைக்கே சவால் விடுது.....  ராகெட் சந்திரன் செவ்வாஇன்னு சர்வ சாதரணமா போகுது...
இந்த ரோபோவ பாருங்க... இளவட்டம் மாதிரி பொண்ணுங்களை லவ் பண்ணுது!
 
இந்த ப்ளாக்கை எடுத்துக்குங்க..... மனுசங்க வுலகத்தில எந்த மூலையில இருந்தாலும் அவக மனசில புகுந்து யோசிக்க வைக்கிற என் வேலைய சுலபமாயிடிச்சே... அதுக்குதானே மெனக்கெட்டு என்னை படைச்சாரு இந்த கதாசிரியர்!
 
அந்த வேலை என்னன்னு இப்ப சொல்லிடறேன்......
 
மாறுதல் நடக்குதே... அது இயற்கைங்க... ஜடப் பொருளுங்களை மனுஷன் மாத்திற மாதிரி, அவனையும் மற்ற வுயிரினங்களையும் பரிணாம வளர்சியால இயற்கை மாத்துது....
 
குரங்கிலேந்து மனுஷன் வந்தான்னு டார்வின் சொன்னாரு நீங்க கேட்டுகிட்டீங்க.... மனுஷன்லேந்து யாரு வருவாங்க? 
 
பாத்தீங்களா.....இது வுங்களுக்கு எவ்வவளவு முக்கியமான விஷயம்!  ஆட்டை தோளில போட்டுக்கிட்டு ஊரெல்லாம் தேடின கதையா, மத்த விஷயங்களுக்கெல்லாம் மண்டைய போட்டு உடைச்சுகிறீங்க !
 
சரி... இப்பவாச்சும் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்து, பரிணாம வளர்ச்சி வுங்களை என்ன பண்ணப் போறதுன்னு யோசியுங்க... நான் மறுபடி வாரேன்...
 
மாயா மாதாஜி  

No comments:

Post a Comment