Friday, November 12, 2010

அடுத்தது என்ன ? WHAT NEXT ? பார்ட் 1


 
எல்லோரும் தங்களோட இஷ்ட கடவுள்களை கும்பிட்டுகுங்க...கடவுளை நம்பாதவங்க இயற்கையை வணங்குங்க .. பெறகு என்ன நெனசிகிட்டு ஒரு பொது விஷயத்தை அலச ரெடியா இருங்க.... அதுக்கு முன்னாடி....
 
என் பேரு மாயா...வயசு 22 .... வுடனே லவ் மேட்டரா? காதல் தோல்வியா? பஞ்சாயத்து பண்ணனுமா ஆளாளுக்கு பதபதைச்சு போயி கியூவில நிக்காதீங்க!  ஏன்னா , நான் ஒரு பொம்பளை சாமியாரு!  அதாவது இந்த ப்ளாக்  ஆரம்பிச்ச கதாசிரியர் எழுதின நாவல்ல நான் ஒரு பாத்திரம்... குறும்புகார வேலைக்கார பொண்ணா கதை முழுக்க இருக்க விட்டுட்டு,  கடோசியில மாயா மாதாஜின்னு மாத்தி, எனக்கு வுங்க சம்பந்தப்பட்ட ஒரு வேலையையும் குடுத்திருக்கார் இந்த ஆசிரியர். 
 
அடுத்ததா இந்த மாயா என்ன சொல்லப்போறான்னு கேக்கறீங்களா?  சொல்லிடறேன்....
 
ஆண்டவன் மனுஷனுக்கு ஆறறிவு குடுத்ததே அடுத்து என்ன செய்யனும்னு அவன்  நெனைக்கதான்.  குகையில வசிச்சு எலையை வுடுத்திகிட்டு வாழ ஆரம்பிச்சவன், இந்த வுலகத்தில  கெடைக்கற அத்தனை பொருள்களையும் வச்சு தன்னோட உபயோகத்துக்காக புதுசு புதுசா கண்டுபிடிச்சு, அப்பப்ப அதுங்கள ஷோக்கா மாத்திகிட்டு இருக்கான்...மரத்தால வீடுன்னு ஆரம்பிச்சு  இப்ப சலவைக்கல் பிளாட்!; சாவி குடுத்தா ஓடின கார் இப்ப குளுகுளு படகு கார்! பக்கத்தில  இருக்கவன் கிட்ட மட்டும்தான் பேசமுடியுமகிரதை கையடக்க செல்போன்ல உலகம் பூரா பேசற மாதிரி மாத்திட்டான்!
 
இப்படி எதை எதையோ கண்டுபிடிச்சு எப்படி எப்படியோ மாதிக்கிட்டுருகிற மனுஷன் எதையாவது விட்டு வச்சிருக்கானா?
 
யோசியுங்க..... நான் அப்புறம் எழுதறேன்.
 
மாயா மாதாஜி           

1 comment:

  1. ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு... அடுத்தது என்ன?

    ReplyDelete