Monday, November 22, 2010

அடுத்தது என்ன? What Next ? Part - 3



அடுத்தது என்ன?

இளவட்டங்க கையில்தான் எதிர்காலம் இருக்குன்னு வுங்களுக்குத் 
தெரியும்...அவங்க இந்த மேட்டர்ல என்ன சொல்லப்போராங்கங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியமில்லியா

ஆனா பாருங்க...அவங்க தனி ட்ராக்கில போறவங்க...sms பார்டிங்க! அவங்ககிட்ட போயி "அட விளையாட்டு பிள்ளைங்களா..நீங்க எதிர் காலத்தில ஷோக்கா மாறப் போறீங்க! தலை வுச்சியிலேந்து பாதம் வரைக்கும் மொகம், கண்ணுகாது, வாய்ஹார்ட்டுகைகாலுன்னு வேற தினுசில புது ஷேப்பில வரப்போறீங்க... அதைப் பத்தி தெரிஞ்சிக்க நீங்க முயற்சி பண்ணனுமில்லியா?", அப்படி இப்படின்னு பழைய பஞ்சாங்கம் கணக்கா வள வளன்னு சொன்னா, அவங்க படக்குன்னு பாட்டுக் கருவியை காதில சொருகிக் கிட்டு போயிகிட்டே இருப்பாங்க!

அதனால தான் அவங்களுக்காக ஸ்பெசல் தலைப்பு...விவேக் டயலாக்கை காப்பி அடிச்சு one-லைன் மெசேஜ்  

இப்படி இருக்கிற நான் ....எப்படி ஆவேன்?

இனி பாருங்க அவங்களை...மனுஷ வுடம்பை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சிபோட்டு அலசப்போறாங்க!

அட...பரிணாம வளர்ச்சி பத்தி ஏற்கனேவே விஞ்சானிங்க, தத்துவ ஞானிங்கன்னு பேப்பர்ல நெறைய எழுதிட்டாங்க... புஸ்தகங்க போட்டுடாங்க....நெட்ல கொட்டி கெடக்குன்னு சொல்ல வாரீங்களா?  

படிச்சு தெரிஞ்சுகிட்டதோட, சராசரி மனுஷனா    வுங்க சொந்த அனுபவங்களை நெனச்சுப் பாருங்க...வுங்க வுடம்போட பாகங்களில சங்கடங்க இருந்திருக்கலாம்... அவிங்களை  வேற விதமா கடவுள் குடுத்தா நல்லா இருக்குமேன்னு மனசில பட்டிருக்கிலாம்... இத மாதிரி விஷயங்களை நீங்க எல்லோரும் பகிர்ந்துகிட்டா என்ன? 

இந்த ஐடியா எப்படி?  'நல்லா இருக்குன்னு மெதுவா இழுக்காதீங்க..வடிவேலு மாதிரி 'ஆமா..நல்லாத்தான் இருக்கு'ன்னு ஜோரா சொல்லிக்குங்க!

ஏற்கனவே மனுஷன் இப்படி யோசிச்சிகிட்டு இருக்கான்னு ஆதாரம் இருக்குங்க... அதில தமாஷா ரெண்டு: 

"கண்ணே... வுன் அழகைப் பருக எனக்கு இரண்டு கண்கள் போதாது" (வுங்க தாத்தா காலத்து கதைங்களில படிச்சிருப்பீங்க)

"இப்படி தறுதலைப் பிள்ளையை பெத்தமேன்னு தலையில அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது" ...பெத்தவங்க போலம்பறாங்களா இல்லியா! 

ஒரு கடி ஜோக்கு: 

டாக்டர்:  ஏம்மா...நான் மிருகங்களுக்கு வைத்தியம் பாக்கிற டாக்டர்...ஒன மாமியார் காதில ப்ராப்ளம்னா ஏன் கிட்ட ஏன் அழைசுகிட்டு வந்தீங்க?

பெண்:  நான் எவ்வளவு மெதுவா திட்டினாலும் என் மாமியார் காதில விழுது டாக்டர்... சந்தேகமே இல்லாம என் மாமியாருக்கு பாம்பு காதுதான்  "

சரி...இப்ப வுன்மைக் கதை ஒன்னை மனசை டச் பண்ணற மாதிரி சொல்றேன்: 

ஒரு இளம் தம்பதிங்க.. துரு துறுன்னு குழந்தை...ரயில் தண்டவாளத்தைத் தாண்டி போயிகிட்ட்ருக்காங்க... தண்டவாளம் நடுவில ஒரு காககா... கையில இருந்த பிஸ்கட்ட காக்காவுக்கு குடுக்க குழந்தை பின்னாடி தங்கிடிச்சு...

அடுத்த நிமிஷம்...வேகமா வந்த பாழாப் போன ரயில் குழந்தை மேல ஏறிடிச்சு...சந்தோஷமா இருந்த பெத்தவங்க கதறி அழறாங்க...அம்மா ஆண்டவனையே திட்டறா... எப்படீன்னு? "ஒன படைபபில ஓர வஞ்சனை பண்ணிட்டியே..கக்கா தப்பிக்க ரெக்கை குடுத்தே...என் குழந்தைக்கு என் குடுக்கலே?"

இப்படிதாங்க கும்பகோணம் தீ விபத்தில குழந்தைங்களை இழந்தவங்க, சுனாமியில சொந்தங்களை இழந்தவங்க படைச்சவனை சபிச்சிருப்பாங்க...

பிளாஷ் நியூஸா இன்னிக்கு டெக்கான் குரோனிகல் பேப்பர்ல 'மனுஷ மூளை பெருசா வளருது ...அவன் சூப்பர்  ஆளா வர்ற டைம் ரொம்ப தூரத்தில இல்லேன்னு ஹைடராபாத்ல ஒரு அமேரிக்கா சைன்டிஸ்ட் மணிலால் புமிக் பேசியிருக்காருன்னு  என் கதை ஆசிரியர் சொல்லறாரு... 

ஆக, மனுஷங்க இப்படிப்பட்ட விபத்து மாதிரி சங்கடங்களை எல்லோரும் லிஸ்டு போட ஆரம்பியுங்க.. நான் கொஞ்சம் ப்ரேக் வுடறேன்!

மாயா மாதாஜி 

nithyavaradants@rediffmail.com
பட உதவி: solarnavigator.net, mosalami.org

No comments:

Post a Comment