Tuesday, June 12, 2012

மூன்றாம் புறம் - பகுதி 10


10. மந்திரியை நம்பி.....
தாளிடப்பட்ட தனியறையில் காஞ்சனாவுடன் நெருக்கமாக இருந்தும், பாஸ்கரின் மனம் வேறெங்கோ அலை பாய்ந்தது.


என்னடா பாஸ்கர்...காத்துகிட்டிருக்கேனே

மனதில் சங்கடத்தை வைத்துக் கொண்டு அவனால் காஞ்சனாவின் கொஞ்சல் அழைப்பை ஏற்க இயலவில்லை.  காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை மறுபடி அசை போட்டுப் பார்த்தான் பாஸ்கர்.


திடீரென அன்று காலை, மந்திரி செல்லமுத்துவிடமிருந்து அழைப்பு வர, காஞ்சனாவுடன் அவரைச் சந்தித்தான் பாஸ்கர்.  பாவம் பாஸ்கர்..வியாபார தந்திரத்தைக் கற்றவனுக்கு அரசியல் சூழ்நிலை தெரியவில்லை!

இன்னும் ஒரு வாரத்தில் எதிர்க் கட்சியினர் சட்டசபையில் ந்ம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாகவும், தனது கட்சியில் பெரும்பான்மையினர், எதிர்கட்சிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு, அதனால் ஆளும் கட்சி கவிழ்வது உறுதியென்றும் செல்லமுத்துவுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.  பார்த்தார் அமைச்சர்.  அகப்பட்டதை உடனே சுருட்டிக் கொண்டு சிங்கப்பூர் ஓடிவிடத் தீர்மானித்தார்!

ஜமீந்தார் நிலங்களில் வீடு கட்டும் திட்டத்தை பட்டேல் கம்பெனி செயல் படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும்  அரசாங்கக் கடிதத்தை அமைச்சர் தந்தபோது பாஸ்கரும் காஞ்சனாவும் பூரிப்படைந்தனர்.  பத்து கோடி ரூபாயை கமிஷனாக இரண்டு நாட்களில் தனக்குத் தந்துவிட வேண்டும், கிராமத்து இளைஞர்கள் எந்த விதமான உரிமையும் கோராமலிருக்க அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கித் தரவேண்டுமென்று நிபந்தனைகளை விதித்தார் செல்லமுத்து.

காஞ்சனாவின் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது.  தன்னுடைய கம்பெனி பேரில் வீடு கட்டும் திட்டத்துக்கு அரசாங்க அனுமதி கிடைத்தாயிற்று,  பாஸ்கர் மூலமாக கிராமத்து இளைஞர்களிடமிருந்து தன்னுடைய கம்பெனிக்காக ஒப்புதல் கடிதங்கள் ஓரிரு நாட்களில் வாங்கி விட்டு, பிறகு அவனைக் கழற்றி விடவேண்டும்! அதற்குள் அவனுடன் இடைவிடாத சுகத்தை அனுபவித்து விடவேண்டும்.

அமைச்சர் வீட்டிலிருந்து காரில் கிளம்பும் போதே, குஷியில் ஒரு பாட்டில் சரக்கை உள்ளே தள்ளி, போதை மயக்கத்துடன் பயணத்தை வழியிலேயே நிறுத்தச் சொல்லி, பாஸ்கரின் மேல் படர்ந்தாள் காஞ்சனா.

மிரண்டு போன பாஸ்கர், பாதுகாப்புக் காரணம் காட்டி தவிர்க்க முயல, அரைகுறை அலங்கோலத்துடன் காஞ்சனா காரை விட்டிறங்கி, சாலையோரக் கடையில் ரப்பர் உறையை சப்தம் போட்டு வாங்க, அந்தக் கண்ணறாவிக் காட்சியை கோகுல் உள்பட பல பேர் பார்க்க, சங்கடத்தில் நெளிந்தான் பாஸ்கர்!

ஏற்கெனவே சியாமளாவுடன் கைகோர்த்துக் கொண்டு கோகுலுக்குச் சிறப்பான முறையில்  கூத்தில் பயிற்சியளித்து வாசு பிரபலமாகி விட்டிருந்தான்.  இப்போது தன்னை காஞ்சனாவுடன் மிக மோசமான கோலத்தில் பார்த்ததை கோகுல் சியாமளாவிடம் சொன்னால், அவள் தன்னிடமிருந்து விலகி விட ஏதுவாகுமே?  கோகுலின் வாயை மூட என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட மன நிலையில், காஞசனாவின் அருகில் பாஸ்கர் மரக்கட்டை மாதிரி படுத்திருந்ததில் ஆச்சரியம் இல்லை!

விரகதாபம் தந்த எரிச்சலில், விருட்டென்று எழுந்து, ஜன்னல் பக்கம் போய் நின்றாள் காஞ்சனா.  கண்ணெதிரே மைதானத்தில் தெரிந்த காட்சி அவளுக்கு வியப்பூட்ட, பாஸ்கரை அழைத்தாள் -

பாஸ்கர்..இங்க வாயேன்..இந்த ராத்திரியில பக்கத்து வெட்டவெளியில என்ன செய்யிறாங்க!

ராட்சத இயந்திரங்களை ராபர்ட், பீட்டர் ஆகியோர் இயக்கி அங்கங்கே பள்ளங்கள் தோண்ட, கோகுல் மற்றும் இதர கிராம இளைஞர்கள் மண்ணுக்குள் எதையோ தேடுவது, பாஸ்கருக்குத் தொலைநோக்குக் கருவி மூலம் தெளிவாகத் தெரிந்தது!

கூட்டாகச் சேர்ந்து அவர்கள் எதையோ ரகசியமாகத் தேடுகிறார்கள்..நிச்சயம்  ஏதோ வில்லங்கமான விவகாரம் தான்.  கிராமத்துப் பசங்களை, குறிப்பாக கோகுலைத் தன் வழிக்குக் கொண்டுவர ஒரு வழி பிறந்து விட்டதனால், பாஸ்கருக்கு மனதில் உற்சாகம் பீறிட்டது.  மன்மத ராசாவாக மாறி, காஞ்சனாவை அலேக்காகத் தூக்கினான்!

(குறிப்பு: வாசகர்களே... முகவுரை எழுதிய மகரிஷி நாரதர்சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கதையைப் படித்து பதில் தாருங்களேன்)

...தொடரும்

No comments:

Post a Comment